சொற்றொடர் பிழைகளும் திருத்தங்களும்.
ஒரு மொழியின் உயிராக விளங்குவது சொற்றொடர்
அமைப்பு எனலாம். கால நிலையால் ஒரு மொழியின் உச்சரிப்புமாறுபடலாம்; சொற்கள் சிதைந்து வேறுபடலாம். ஆனால் ஒரு மொழியின் சொற்றொடர்அமைப்பு மட்டும் மாறுபடுவதில்லை. இது மொழிநூல்வல்லுநர் பற்பல்மொழிகளை ஆராய்ந்து கண்டஉண்மையாகும்.
சொற்றொடர்களில் சில வகையான பிழைகள்அமைந்து காணப்படுகின்றன. எழுவாய்க்கேற்ற பயனிலை இன்றிப்பிழையுடையதாக அமைந்திருத்தலும், திணைவழு, பால்வழு, எண்வழு, இடவ ழுமுதலிய பிழைகளும் அமைந்து
காணப்படும். இப்பிழைகளெல்லாம் நீங்குவதற்குச் சில குறிப்புகளைமனத்தற்கொள்ளவேண்டும். உயர்திணையிலுள்ள எழுவாய்கள் உயர்திணைப் பயனிலைளக் கொண்டுமுடியும்
அஃறிணைஎழுவாய்கள், அஃறிணைப்பயனிலைகளைக் கொண்டு முடியும்.
இருதிணைஎழுவாய்கள் கலந்து வந்தால், அவை சிறப்புக கருதின் உயர்திணைப் பயனிலை கொண்டுமுடியும்
அவை இழிவு கருதின் அஃறிணைப்பயனிலை கொண்டுமுடியும். இரு திணைப் பெயர்கள்கலந்து வந்தால், மிகுதி காரணமாக ஒரு திணைக்குறிய வினைகொண்டு முடியும். ப லஎச்சத் தொடர்கள் ஒரு வினைகொண்டு முடிந்தால் அவை தனித்தனியே 'உம்' பெற்றும், 'தாம்' கொண்டும்முடியும். வெவ்வேறு சிறப்பு வினைகளுக்குரிய பொருள்களின் பெயர்கள் தனித்தனியாகவோ,தொகுதியாகவோ கூறப்பட்டு ஒருவினை முடிவு பெற்றால், அவைபொது வினைகொண்டு முடியும். இக்குறிப்புகளை மனத்திற்கொண்டு எழுதினால்
சொற்றொடர்களில் நேர்கின்ற பிழைகளத் தவிர்க்கலாம். சில
சொற்றொடர்பிழைகளையும், அவற்றின்திருத்தங்களையும் கண்டுநோக்குவோமாக.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=
பிழை திருத்தம்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
(1) இங்கே வந்தவன் அவன் அல்ல .......... அவன்அல்லன்
(2) இம்மருந்து அவர் நோய்க்குமிகவும் ஏற்றவன். .... மிகவும் ஏற்றது.
(3) நாகனும் நாயும் வந்தன. .......வந்தனர்.
(4) மூர்க்கனும் முதலையும் கொண்டது விடார் . ........... விடா.
(5) தெருவில் இரண்டு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
.......... சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
(6) கழுதைகள் வேகமாக ஓடாது. ...................... வேகமாக ஓடா.
(7 ) நான் தந்த புத்தகம இதுவல்ல. ........ ..........................இஃதன்று.
(8) இதனைச் செய்தவர் அவர் அல்லவா? .....................அவர் அல்லரா?
(9) அந்த மரங்க ள்பார்வைக்குச் சிறியதாய் இருக்கும். .... சிறியனவாய் இருக்கும்.
(10) முதல்வர் தன்குடிகளிடம் அன்பாய் இருக்கிறார் ......தமகுடிகளிடம்.........
(11) மாணாக்கர் தான் படிப்பதற்குப் புத்தகங்களைக் க ......தாம் படிப்பதற்கு...
(12) எனது மாணவனது கட்டுரைகளைத் திருத்தினேன். ........என் மாணவனுடைய....
(13) நாச்சியப்பன் தமதுபையனைக் கூப்பிட்டார்... . .....தம் பையனை.....................
(14) மதிவாணன் எனது புத்தகங்களை எடுத்தார். ..........என்னுடைய அல்லது என் புத்தகங்களை........
(15) அங்கே என் புத்தகம் உள. ...... உளது அல்லது உண்டு.
(16) என் தோட்டத்தில் ஒரு மாமரம் ஒன்று காய்க்கிறது.
ஒருமாமரம் அல்லது மரம்ஒன்று..
(17) அங்கே பல அறிஞர்கள் பேசினார்கள். ............அறிஞர் பலர்......................
(18) நம்பியுடைய நல்லபண்புகளை எல்லாம் நம்மதாக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
.................................................................நம்மவையாக்கிக் கொள்ளவேண்டும்.
(19) ஒவ்வொரு ஊர்களிலும் தேர்தல் பிரச்சாரம்நடைபெருகிறது......
.....................ஊரிலும் .................
(20) அருளப்பர் கல்வி அறிவு ஒழுக்கத்திற் சிறந்தவர்.
......... ......கல்வி அறிவு ஒழுக்கங்களிற்.........................